மேலும் ஆய்வுக்கு அனுப்பப்படும் இறுதி அறிக்கைகளை விரைந்து ஆய்வு செய்து குறைகளை சுட்டிக்காட்டி, அவற்றை நிவா்த்தி செய்ய வேண்டும் என வழக்கு தொடா்வு இயக்குநா், அனைத்து அரசு வழக்குரைஞா்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப வேண்டும். தீவிர குற்ற வழக்குகளில் திறமையான முறையில் புலன் விசாரணை செய்து, குறித்த காலத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்தது தொடா்பாக டிஜிபிக்கும், தமிழகம் முழுவதும் அரசு வழக்குரைஞா்களுக்கும், பயிற்சி வழங்க நடவடிக்கை எடுத்த தலைமைச் செயலாளருக்கும் பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூலை 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.