சேலம்: பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சனிக்கிழமை நடைபெற்ற தலைவாசல் அருகே வீரகனூர் வாரச்சந்தையில் ரூ.4 கோடிக்கு மேல் ஆடுகள் விற்பனையானது.
தலைவாசல் அருகே வீரகனூரில் அமைந்துள்ள மாவட்டத்திலேயே மிகப்பெரிய இரண்டாவது சந்தையான கால்நடைச் சந்தையில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 4 கோடிக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்றது
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வீரகனூரில் மாவட்டத்திலேயே மிகப்பெரிய இரண்டாவது சந்தை வீரகனூர் கால்நடைச் சந்தை .
இந்த சந்தைக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக கால்நடைகளை கொண்டு வருவது வழக்கம். மேலும் இங்கு நடைபெறும் வாரச்சந்தை சனிக்கிழமைகளில் நடைபெறும்.
இந்த நிலையில் வருகின்ற 29 ஆம் தேதி பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு கால்நடைச் சந்தையில் ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
அதிகாலை முதலே ஆடுகளின் வரத்து அதிகமாகக் காணப்பட்டது. இதில் வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள், மேச்சேரி இன ஆடுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான ஆடுகள் விற்பனைக்காக விவசாயிகள் கொண்டு வந்தனர்.
மேலும், இங்கு விற்பனைக்காக கொண்டு வரப்படும் ஆடுகள் கேரளா, கர்நாடகா மாநிலம் மற்றும் பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம், ஈரோடு, கிருஷ்ணகிரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகள் ஆடுகளை அதிக அளவில் கொள்முதல் செய்தனர்.
கால்நடைச் சந்தையில் 5 ஆயிரத்திற்கு மேல் ஆடு, மாடுகள் விற்பனை செய்யப்பட்டதில் ரூ.4 கோடிக்கு விற்பனை நடைபெற்றது.
இந்த வீரகனூர் சந்தையில் வழக்கத்தைவிட ஆடு, மாடுகள் அதிக அளவு வந்திருந்த போதிலும் பக்ரீத் பண்டிகை என்பதால் இறைச்சி கிலோவுக்கு ரூ.500 முதல் ரூ.1000 வரை விலை உயர்ந்துள்ளது,
மேலும் 60 கிலோ எடையுள்ள ஆடு ஒன்று ரூ. 40 ஆயிரம் வரை விற்பனையானது.
பக்ரித் பண்டிகை என்பதால் இன்று சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் விற்பனை அமோகமாக நடைபெற்றது.
கடந்த ஆண்டு விற்பனையைவிட இந்த ஆண்டு ஆடுகள் விற்பனை ஆமோகமாக இருந்ததால் வியாபாரிகளும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.