மேட்டூர் அணை நீர்வரத்து 223கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக சரிந்து வந்தது. நேற்று காலை வினாடிக்கு 153கன அடி வீதம் வந்து கொண்டிருந்த நீர் வரத்து இன்று காலை 223கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.
நீர் வரத்து சரிந்த நிலையில் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 10,000கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
அணைக்கு வரும் நீரின் அளவைவிட பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் இன்று காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95.53அடியாக யிலிருந்து 94.82 அடியாக சரிந்துள்ளது.
அணையின் நீர் இருப்பு 58.33 டி.எம்.சியாக உள்ளது