சரக்கு ரயில் விபத்து: 14 ரயில் சேவைகள் ரத்து!

மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து 14 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 
விபத்துக்குள்ளான சரக்கு ரயில் பெட்டிகள்
விபத்துக்குள்ளான சரக்கு ரயில் பெட்டிகள்


மேற்கு வங்கத்தில் 2 சரக்கு ரயில்கள் ஒன்றோடொன்று மோதி விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து 14 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

மேலும், 3 ரயில்கள் மாற்று வழியில் இயக்கப்படுவதாகவும், 2 ரயில்கள் பாதி தூரத்துக்கு இயக்கப்படுவதாகவும் தென்கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

மேற்கு வங்க மாநிலம் பங்குரா பகுதியிலுள்ள ஓண்டா ரயில் நிலையம் அருகே இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இரண்டு சரக்கு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. 

காரக்பூர் - பாங்குரா - ஆட்ரா வழித்தடங்களில் செல்லும் ரயில் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மற்றொரு சரக்கு ரயில் மோதி விபத்து நேர்ந்துள்ளது. 

இந்த விபத்தில் 12 பெட்டிகள் தடம் புரண்டுள்ளன. இவற்றை சரி செய்யும் பணியில் ரயில்வே துறை ஈடுபட்டுள்ளது. எனினும் முழு ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தி சேதங்களை சரி செய்ய 8 மணி நேரம் தேவைப்படும் எனவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இதனால், பாங்குரா வழித்தடத்தில் இயக்கப்படும் 14 ரயில் சேவைகள் நிறுத்திவைக்கப்படுவதாக தென்கிழக்கு ரயில்வே அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com