

சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி கிலோ ரூ.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு கோயம்பேடு சந்தையிலிருந்து காய்கறிகள், பழங்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. மொத்த விலையிலும் சில்லறையாகவும் இவை விற்பனை செய்யப்படுகின்றன. வழக்கத்தைவிட சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. தற்போது தக்காளி வரத்து தினமும் 350 டன் என உள்ளது.
சென்னைக்கு தக்காளி வரத்து 30 சதவீதம் வரை குறைந்துள்ளதால், அதன் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, கோயம்பேடு சந்தையில் மொத்த விலையில், ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து வரக்கூடிய தக்காளி வரத்து குறைந்ததால் விலை உயர்வு எனத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த ஒரு வாரமாக ரூ.40க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி ஒரே நாளில் ரூ.80 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.