குரூப் 2 தேர்வு முடிவுகள் குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற குரூப் 2 மற்றும் குரூப் 2A பணியிடங்களுக்கான முதன்மைத் தேர்வு முடிவுகள், வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது
இதுதவிர, வன பயிற்சியாளர் பணிகள், கால்நடை உதவி அறுவை சிகிச்சை நிபுணர், மாவட்ட கல்வி அலுவலர், உதவி வன பாதுகாவலர், நூலகர் பணியிடங்கள், புள்ளியியல் துறை உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஏற்கெனவே நடத்தப்பட்ட தேர்வுகளுக்கான முடிவுகள் ஜூலை மாதம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவரங்களுக்கு டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள https://www.tnpsc.gov.in/static_pdf/document/Result_Schedule.pdf என்ற லிங்கை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிக்க: மாமன்னன் படத்துக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு!