புதுக்கோட்டை: மின்னல் தாக்கி பெண் பலி!
ஆலங்குடி அருகே மின்னல் தாக்கி பெண் வியாழக்கிழமை (ஜூன் 29) மாலை உயிரிழந்தார்.


ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே மின்னல் தாக்கி பெண் வியாழக்கிழமை (ஜூன் 29) மாலை உயிரிழந்தார்.
ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலம் ஊராட்சி சிதம்பர விடுதியைச் சேர்ந்தவர் கோபு மனைவி வித்யா(30). கோபு வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு 3 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில், கொத்தமங்கலம் பகுதியில் வியாழக்கிழமை மாலை கருமேகங்கள் சூழ்ந்து இடி, மின்னலுடன் மழைபெய்யத் தொடங்கியபோது, வித்யா அவரது வீட்டு வாசலில் வேலை செய்துகொண்டிருந்தார்.
அப்போது, மின்னல் தாக்கியது. இதில், உடல் கருகிய நிலையில், அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் வித்யா உயிரிழந்தார். இதுகுறித்து கீரமங்கலம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...