சர்வதேச மகளிர் நாளையொட்டி, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள புராதன சின்னங்களைக் காண அனுமதி இலவசம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
சர்வதேச மகளிர் நாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்றைய தினம், செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை உள்ளிட்ட புராதன சின்னங்களை இலவசமாகச் சென்று பார்க்கலாம் என்று தொல்லியல் துறை அறிவித்துள்ளது.