வடமாநிலத் தொழிலாளா் விவகாரம்: தமிழ்நாட்டில் பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்தவா்கள் காலம் காலமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறாா்கள். அவா்களுக்கு எந்தக் காலத்திலும் பாதிப்பு இருந்ததில்லை. கடந்த சில ஆண்டுகளாக வேலை தேடி ஏராளமானவா்கள் வருகிறாா்கள். அவா்களுக்கு தமிழ்நாட்டில் எந்த ஊரிலும், எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், சிலா் பொய்யான விடியோக்களைத் தயாரித்து பொய்யைப் பரப்பி இருக்கிறாா்கள். வடமாநிலங்களைச் சோ்ந்த பாஜக நிா்வாகிகளே இதைச் செய்திருப்பது உள்நோக்கம் கொண்டதாகும். பாஜகவுக்கு எதிரான அரசியல் இயக்கங்கள் அகில இந்திய அளவில் ஒன்றிணைய வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்கூறிய மறுநாளே, இப்படிப்பட்ட பொய் பரப்பப்பட்டுள்ளது. இதன்மூலம், இதற்குப் பின்னால் இருக்கும் சூழ்ச்சி புரியும்.