பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

அபாய கட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம்: அதிகாரிகள் சொல்வதைக் கேளுங்கள்!

தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்ட நிலவரம் குறித்த பட்டியல் அபாய மணியாக ஒலிக்கிறது.

News image

அபாய கட்டத்தில் நிலத்தடி நீர்மட்டம்: அதிகாரிகள் சொல்வதைக் கேளுங்கள்!

Updated On :9 மார்ச் 2023, 7:48 am

சென்னை: தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களின் நிலத்தடி நீர்மட்ட நிலவரம் குறித்த பட்டியல் அபாய மணியாக ஒலிக்கிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம், 19 மாவட்டங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்திருக்கிறது. அதேவேளையில் 17 மாவட்டங்களில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நிலத்தடி நீர்மட்டம் சற்று அதிகரித்தும் உள்ளது. 

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தைக் காட்டிலும் இந்த பிப்ரவரி மாதம் கோடை வெப்பம் குறைவாக இருந்தாலும், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்திருப்பது கவலையை ஏற்படுத்துகிறது.

நெல்லையில் 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில் 2.28 மீட்டரில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் தற்போது 5.31 மீட்டராக சரிந்துள்ளது.

திருப்பத்தூரில் 0.07 மீட்டருக்குத்தான் சரிந்துள்ளது. கிருஷ்ணகிரியல் 6.13 மீட்டரில் இருந்து தற்போது 2.67 மீட்டராக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

இது குறித்து நீர்வளத் துறை அதிகாரிகள் கூறுகையில், வழக்கம் போல, கடந்த வடகிழக்குப் பருவமனை காலத்தில் ஜனவரி மாதம் வரை நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக அதிகரித்து வந்தது. ஆனால், பிப்ரவரியில் வெப்பம் அதிகரிக்கும் போது நீர்மட்டமும் குறையத் தொடங்கியது. அதிகாரிகள் தொடர்ந்து நீர்மட்ட நிலவரத்தை கண்காணித்து வருகிறார்கள். அதே வேளையில் மக்களும் இக்கணமே சிக்கனத்தை கடைப்பிடித்து நீரை சேமிக்க வேண்டுகோள் விடுக்கிறார்கள். அப்போதுதான் கோடை வெயிலின்போது தண்ணீர் இருப்பு உறுதி செய்யப்படும் என்று வலியுறுத்துகிறார்கள்.

நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க, நீர்நிலைகளை தூர்வாரி சரியாக பராமரிப்பதும், பயன்பாடற்று போன நீர்நிலைகளைக் கண்டறிந்து அவற்றில் நீர்சேமிக்கும் திறனை அதிகரிக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.