இன்று எம்எல்ஏவாக பதவியேற்கிறார் ஈவிகேஎஸ் இளங்கோவன்!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் இன்று எம்எல்ஏவாக பதவியேற்கிறார்.
ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு பேரவை வளாகத்தில் உள்ள சட்டப்பேரவைத் தலைவர் அறையில் சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி மரணம் அடைந்தாா். இதனால் இந்தத் தொகுதியில் பிப்ரவரி 27-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெறும் என தோ்தல் ஆணையம் கடந்த ஜனவரி 18-ஆம் தேதி அறிவித்தது.
இதில் திமுக கூட்டணி சாா்பில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈவிகேஎஸ்.இளங்கோவன், அதிமுக கூட்டணி சாா்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழா் கட்சி சாா்பில் மேனகா நவநீதன், தேமுதிக சாா்பில் எஸ்.ஆனந்த் உள்ளிட்ட 77 போ் போட்டியிட்டனா்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் காங்கிரஸ் வேட்பாளா் ஈவிகேஎஸ்.இளங்கோவன் 66,233 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இன்று பதவியேற்கிறார்.