கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

திருப்பூர் சித்ரகுப்தர் கோயிலில் சித்ரா பெளர்ணமி விழா கோலாகலம்!

திருப்பூர் சின்ணாண்டிபாளையத்தில் உள்ள சித்ரகுப்தர் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

News image

சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு திருப்பூர் சின்ணாண்டிபாளையத்தில் உள்ள சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சித்ரகுப்தர்.

Updated On :5 மே 2023, 7:30 am

DIN

திருப்பூர் சின்ணாண்டிபாளையத்தில் உள்ள சித்ரகுப்தர் கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

திருப்பூரில் இருந்து மங்கலம் செல்லும் சாலையில் உள்ள சின்ணாண்டிபாளையம் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சித்ரகுப்தர் திருக்கோயில் உள்ளது. தமிழகத்தில் இரண்டாவதாக சித்ரகும்தருக்கு இங்கு தனிக்கோயில் கட்டப்பட்டுள்ளது. 

Story image

இந்தக் கோயிலின் சிறப்பாகும். இங்கு கையில் எழுத்தாணி மற்றும் ஓலைச்சுவடியுடன் காட்சி தரும் சித்ரகுப்தர் மனிதர்களின் பாவக் கணக்கை எழுதி அவர்களின் கர்ம வினைக்கு தக்க பலன் அளிப்பார் என்பது இப்பகுதி பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. 

Story image

இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பெளர்ணமி விழா வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த நாளில் சித்ரகுப்தரை தரிசனம் செய்தால் மனிதர்களின் கர்ம வினை பலன் நல்லவிதமாக மாறும் என நம்பப்படுகிறது. சித்ரா பெளர்ணமியை முன்னிட்டு சித்ரகுப்தருக்கு தேன், நெய், பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், மஞ்சள் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றது. 

Story image

திருப்பூர் மட்டுமின்றி கோவை, ஈரோடு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.மேலும், பெண் பக்தர்கள் சித்ரகுப்தருக்கு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். கோயில் நிர்வாகம் சார்பில் 4 ஆயிரம் அரிசியைக் கொண்டு உணவு தயாரித்து பக்தர்களுக்கு பரிமாறப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.