பாஜவை வீழ்த்த எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறக்கூடாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், திமுக 2 ஆண்டு கால ஆட்சியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இதுவரை 80 விழுக்காடு வாக்குறுதிகளை நிறைவேற்றி இருக்கிறார். நிலுவையில் உள்ள சில வாக்குறுதிகளையும் படிப்படியாக நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
எந்தெந்த வகையில் எல்லாம் ஹிந்தியை திணிக்க முடியுமோ அந்தந்த வகையில் பாஜ செயல்பட்டு வருகிறது. நாடாளுமன்ற நடவடிக்கைகள் கூட அனைத்து விதத்திலும் ஆங்கிலத்தில் இருந்து இந்திக்கு மாறியுள்ளது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறிவிடாமல் பாதுகாக்க வேண்டும். அப்போதுதான் பாஜகவை வீழ்த்த முடியும் எனக் குறிப்பிட்டார்.