கரூர் மாவட்டத்தில் மே 31 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாரியம்மன் கோயில் வைகாசி விழாவின் கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்வுக்காக உள்ளூர் விடுமுறை விடுப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கரூர் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும், வைகாசி திருவிழா வெகு சிறப்பாக நடப்பது வழக்கம். வரும் மே 14 ஆம் தேதி கம்பம் நடுதலுடன் விழா தொடங்கவுள்ளது.