இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட உணவுபாதுகாப்புத்துறை அதிகாரிகள் கூறியதாவது: பழங்களை இயற்கையான முறையில் மட்டுமே பழுக்க வைக்க வேண்டும். ரசாயனங்களை வைத்து பழங்களை செயற்கையான முறையில் பழுக்க வைக்க கூடாது. ரசாயனங்கள் மூலம் பழுக்கவைக்கப்பட்ட பழங்களை சாப்பிடும் பொழுது உடல் உபாதைகள் ஏற்படும். அதிலும் குறிப்பாக தோல் அலர்ஜி, வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி மயக்கம் ஏற்படும். ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட மாம்பழங்கள் தோல் பகுதி வெளிர் மஞ்சள் நிறத்தில் இருப்பதுடன், உள்பகுதி காயாக இருக்கும். பழச்சாறு அளவு குறைவாகவும் பழத்தின் இயற்கையான மணம், சுவை குறைவாக இருக்கும். இதுபோல ரசாயனங்களை பயன்படுத்தி பழங்களை பழுக்க வைப்பது தெரியவந்தால் 94440 42322 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.