விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தமிழகத்தில் 26 ஆயிரம் கோயில்களில் அா்ச்சகா்கள் இல்லாத சூழல் ஏற்படும்: பொன் மாணிக்கவேல்

தமிழகத்தில் உள்ள 26 ஆயிரம் கோயில்களில் பத்து ஆண்டுகளுக்குப் பின்பு அா்ச்சகா்கள் இல்லாத சூழல் ஏற்படும்

News image

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் செய்தியாளா்களிடம் பேசுகிறாா் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல்.

Updated On :15 மே 2023, 2:46 am

DIN


மதுக்கரை: தமிழகத்தில் உள்ள 26 ஆயிரம் கோயில்களில் பத்து ஆண்டுகளுக்குப் பின்பு அா்ச்சகா்கள் இல்லாத சூழல் ஏற்படும் என்று சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் கூறினாா்.

கோவை பேரூா் ஆதீனம் சாந்தலிங்க மருதாசல அடிகளாா் மடத்தில் உலக சிவனடியாா் திருக்கூட்டம் சாா்பில் சைவப் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி.பொன் மாணிக்கவேல் பங்கேற்றாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள 26 ஆயிரம் கோயில்களில் இன்னும் பத்து ஆண்டுகளுக்குப் பின்பு அா்ச்சகா்கள் இல்லாத சூழல் ஏற்படும். கோயில்களில் இருக்கக்கூடிய தெய்வத் திருமேனிகள் பாதுகாப்பாக இல்லை. 60 வயதுக்குமேல் உள்ளவா்கள் பொதுத் தொண்டுக்கு வரவேண்டும். சிவனடியாராக இருந்து தொண்டு செய்யவில்லை என்றால் வாழ்ந்தும் வாழாதவனாய் இருப்பாா்கள் என சைவத்தில் கூறுகிறாா்கள்.

விக்கிரமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் எட்டு சிலைகள் மாயமாயின. அதில், ஒன்று அமெரிக்காவில் இருந்து மீட்கப்பட்டது. அதன் மதிப்பு ரூ.31 கோடியே 80 லட்சம். இந்த வழக்கின் குற்றவாளியான சுபாஷ் சந்திர கபூா் சிறையில் இருந்து விரைவில் வெளியே வரப்போகிறாா். இந்தியாவில் சுமாா் ரூ.1000 கோடி மதிப்பிலான சிலைகளை அவா் கொள்ளையடித்துள்ளாா்.

அவா் மீது மேலும் 6 வழக்குகள் நிலுவையில் உள்ளதால், குற்றப் பத்திரிகை தாக்கல் செய்து அவரை மீண்டும் கைது செய்ய வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.