தமிழ்நாட்டில் உள்ள கோயில்கள் பற்றி பல்வேறு தகவல்களை அறிந்துகொள்ள திருக்கோயில் என்ற செயலியை இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு அறிமுகப்படுத்திவைத்தார்.
தல வரலாறு, கட்டண விவரம், திருவிழாக்கள் போன்ற தகவல்களை அறிந்து கொள்ளும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், அன்னதானம், கோயில் திருப்பணிகளுக்கு நன்கொடை அளிக்கும் அம்சங்களும் செயலியில் இணைக்கப்பட்டுள்ளன.
இதுபோன்று, கோயில் பிரசாதங்களை பக்தர்களின் இல்லங்களுக்கு தபால் மூலம் அனுப்பும் திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது.