10ம் வகுப்புத் தேர்வு முடிவு: 5வது இடத்தில் தூத்துக்குடி!

 தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை வெளியானது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தூத்துக்குடி: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று (மே 19) காலை வெளியானது.

இதில் துத்துக்குடி மாவட்டத்தில்  95.58  சதவீத மாணவ - மாணவிகள் தேர்ச்சி பெற்றதையடுத்து, தேர்ச்சி விகிதத்தில் தூத்துக்குடி மாவட்டம் 5ஆம் இடத்தை பிடித்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் 10,752 மாணவர்கள, 11,249 மாணவிகள் என மொத்தம் 22,001 பேர் தேர்வு எழுதினர். இதில்  10,033 மாணவர்கள்,  10,996 மாணவிகள் என மொத்தம் 21,029 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். ஒட்டுமொத்த தேர்ச்சி சதவீதம் 95.58 ஆகும்.

இதன்மூலம் தேர்ச்சி விகிதத்தில் கடந்த ஆண்டு 9-வது இடத்தில் இருந்த தூத்துக்குடி மாவட்டம் நிகழாண்டு 5-ஆவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com