புதுச்சேரியில் குறைந்த தேர்ச்சி விகிதம்: ஆய்வு செய்ய குழு - முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் குறைந்த தேர்ச்சி விகிதம்: ஆய்வு செய்ய குழு - முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். 

தமிழ்நாடு, புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. இதில், புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.05 சதவிகிதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுச்சேரியில் 88.85 சதவிகித மாணவர்களும், 93.30 சதவிகித மாணவிகளும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தை விட இந்த ஆண்டு 3.8 சதவிகிதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், புதுச்சேரியில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து ஆய்வு செய்ய குழு அமைத்து ஆய்வு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 100% தேர்ச்சியை நோக்கி அரசு சிறந்த கல்வியை கொடுக்க முயற்சி எடுக்கும் என்றும் முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

மேலும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கல்வி கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 91.39% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த 2022 ஆம் ஆண்டை காட்டிலும் 1.32% கூடுதல் தேர்ச்சி ஆகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com