சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

ஏற்காடு கோடை விழா இன்று தொடக்கம்

ஏற்காடு கோடை விழாவின் முதல் நிகழ்வாக மலை ஏறும் பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 5:17 pm IST

ஏற்காடு கோடை விழாவின் முதல் நிகழ்வாக மலை ஏறும் பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர்.

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் 46 வது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி வழக்கமான உற்சாகத்துடன் இன்று தொடங்குகிறது.

இன்று தொடங்கி வருகின்ற 28 ஆம் தேதி வரை 8 நாள்கள் நடைபெறும் இந்த கோடை விழாவில் ஒவ்வொரு நாளும் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Story image

இன்று மாலை தொடக்க விழா நடைபெற உள்ள நிலையில் கோடை விழாவில் முதல் நிகழ்ச்சியாக சேலத்தில் இருந்து ஏற்காட்டிற்கு மலை ஏறும் பயிற்சி இன்று காலை தொடங்கியது.

மாவட்ட வனத் துறை, விளையாட்டு துறை மற்றும் சுற்றுலாத் துறை ஆகியவை இணைந்து நடத்திய இந்த மலையேறும் பயிற்சியினை மாவட்ட வன அலுவலர் சேசாங்ரவி வனச் சரகர் முரளிதரன் கனிம வளத் துறை துணை இயக்குனர் ஜெயந்தி ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். 

ஏற்காடு அடிவாரத்தில் இருந்து குதிரைவழி என்ற பாதையில் இந்த மலையேறும் பயிற்சி நடைபெற உள்ளது. இந்த பயிற்சியில் சிறுவர், சிறுமிகள் மற்றும் மாணவ, மாணவிகள் முதியவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றுள்ளனர்.

வழிநெடுத்திலும் சுற்றுச்சூழல் மாசுபாடு, பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் இயற்கை பாதுகாப்பு குறித்து கிராம மக்களிடையே மலை ஏறும் பயிற்சியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.