ஏற்காடு சுற்றுலாத் தலங்களில் வானியல் நிகழ்ச்சிகள்!

ஏற்காடு சுற்றுலாத் தலங்களில் நடைபெற்று வரும் வானியல் நிகழ்ச்சிகளை கண்டு மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
தொலைநோக்கி மூலம் காணும் மக்கள்
தொலைநோக்கி மூலம் காணும் மக்கள்

ஏற்காடு சுற்றுலாத் தலங்களில் நடைபெற்று வரும் வானியல் நிகழ்ச்சிகளை கண்டு மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு, சேலம் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை மற்றும் மலைப் பயிர்கள் துறை, சேலம் சுற்றுலாத்துறை ஆகிய துறைகள் இணைந்து ஏற்காடு 46-வது கோடைத் திருவிழாவை நடத்தி வருகிறது.

இந்நிகழ்வில் மலர் கண்காட்சி உள்பட பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்ட சுற்றுலாத்துறை, தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும்  சயின்ஸ் சொசைட்டி இணைந்து ஏற்காட்டில் இரவு வான் நோக்குதல் நிகழ்ச்சி, பகல் நேர வானியல் நிகழ்ச்சி நடத்தி வருகிறது. இதற்காக 10-கும் மேற்பட்ட பல்வேறு விதமான திறன்வாய்ந்த, விலையுயர்ந்த தொலைநோக்கிகளோடு தமிழகம் முழுவதும் இருந்து 16 கருத்தாளர்கள் ஏற்காட்டிற்கு வந்துள்ளனர்.

ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களான அண்ணா பூங்கா, லேடிஸ் வியூ பாயிண்ட், சில்ட்ரன் வியூ பாயிண்ட், சேர்வராயன் கோவில், ரோஜா பூங்கா, தாவரவியல் பூங்கா(பொட்டானிக்கல் கார்டன்), லேக் பார்க் உள்பட பல சுற்றுலாத் தளங்களில் பகல் நேர வானியல் நிகழ்ச்சியும், இரவு நேர வான்நோக்குதல் நிகழ்ச்சியும் தமிழ்நாடு அஸ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டியின் கருத்தாளர்கள் நடத்தி வருகின்றனர்.

பகல் நேர வானியல் நிகழ்ச்சியில், பல்வேறு வானியல் சார்ந்த கருத்துகள் மக்களிடையே எடுத்துரைக்கப்பட்டது. சூரியனின் கரும்புள்ளிகள் தொலைநோக்கி வழியே சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு நேர வான்நோக்குதல் நிகழ்ச்சியில் பிறை நிலா, வெள்ளியின் பிறை மற்றும் சில நட்சத்திர கூட்டங்களை கண்டு ரசிப்பதோடு மட்டுமல்லாமல் அது குறித்த விளக்கங்களை தமிழ்நாடு அஷ்ட்ரானமி மற்றும் சயின்ஸ் சொசைட்டியின் கருத்தாளர்கள் சுற்றுலா பயணிகளுக்கு எடுத்துரைத்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகள், உள்ளூர் பொதுமக்கள், குழந்தைகள் என பல்லாயிரக்கணக்கானோர் நிகழ்வுகளை மகிழ்ச்சியோடு கண்டு களித்து உற்சாகமடைந்துள்ளனர்.

மேலும், இந்நிகழ்வில் தொலைநோக்கிகள் மூலம் வான்நோக்கும் நிகழ்ச்சி நடைபெறுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், இது புது முயற்சியாக இருப்பதாகவும் மக்கள் தெரிவித்தனர்.  இந்த வாய்ப்பை ஏற்படுத்தி தந்த தமிழ்நாடு அரசுக்கும், கருத்தாளர்களுக்கும் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com