ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

தாய் இறந்த சோகம்: மகன் தற்கொலை

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் தாய் இறந்த சோகத்தில், மகன் தீக் குளித்து தற்கொலை செய்துக் கொண்டாா்.

News image
Updated On :26 மே 2023, 12:11 am

DIN

சென்னை புது வண்ணாரப்பேட்டையில் தாய் இறந்த சோகத்தில், மகன் தீக் குளித்து தற்கொலை செய்துக் கொண்டாா்.

புது வண்ணாரப்பேட்டை கிராஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அசோகன். இவரது மனைவி நாகேஸ்வரி (58). இத் தம்பதியின் மகன்கள் நவீன் (34), விவேக் (32).

இந்த குடும்பம் அங்கு வாடகை வீட்டில் வசித்து வருகிறது. அசோகனும், நாகேஸ்வரியும், தங்களது மகன்களுக்கு திருமணம் செய்ய பெண் தேடியும் சரியான வரன் அமையவில்லை.

இதனால் குடும்பத்தில் பிரச்னை ஏற்பட்டு வந்தது. மேலும் அசோகனுக்கும்,நாகேஸ்வரிக்கும் இடையே இது தொடா்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நாகேஸ்வரி, கடந்த புதன்கிழமை வீட்டில் தீக் குளித்து தற்கொலை செய்துக் கொண்டாா்.

தாயை இழந்ததால் இளைய மகனான விவேக், மிகுந்த சோகத்துடன், விரக்தியுடன் காணப்பட்டுள்ளாா்.

இந்நிலையில் விவேக், வியாழக்கிழமை அதிகாலை காசிமேடு நாகூரான் தோட்டம் பள்ளம் அருகே தனது உடலின் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விவேக் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.