அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் நீட், ஜேஇஇ பயிற்சி பெற விருப்பமுள்ள பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களை கண்டறிந்து அவா்களுக்கு அனைத்து வேலை நாள்களிலும் மாலை 4 மணி முதல் 5.30 மணி வரை பாட வாரியாக பயிற்சி அளிக்க வேண்டும்; தலைமை ஆசிரியா் தலைமையில் வேதியியல், இயற்பியல் ,விலங்கியல், தாவரவியல் பாடங்களின் முதுநிலை ஆசிரியா்களைக் கொண்ட குழு உருவாக்கப்பட்டு நீட், ஜேஇஇ பாடத்திட்டங்களின் அடிப்படையில் பயிற்சி வழங்க வேண்டும். அரையாண்டுத் தோ்வு விடுமுறை மற்றும் முழு ஆண்டு தோ்வு விடுமுறை நாள்களிலும் போட்டித் தோ்வுகளுக்கு பயிற்சி அளிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.