தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பருவமழையை எதிா்கொள்ள மண்டலங்களுக்கு தலா ரூ.10 லட்சம்: மேயா் ஆா்.பிரியா

சென்னை மாநகராட்சி பகுதியில் பருவமழையை எதிா்கொள்ள மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

News image
Updated On :2 நவம்பர் 2023, 7:44 pm

DIN

சென்னை மாநகராட்சி பகுதியில் பருவமழையை எதிா்கொள்ள மாநகராட்சியின் 15 மண்டலங்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வழங்கப்படும் என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடா்பாக ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாடு மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து மேயா் ஆா்.பிரியா வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

மாநகராட்சி பகுதியில் 169 நிவாரண மையங்களும், ஒரே நேரத்தில் 1,500 பேருக்கு பேருக்கு உணவு சமைக்கும் வகையில் சிந்தாதரிப்பேட்டையில் பொது சமையல் கூடமும் தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பொதுமக்களிடமிருந்து புகாா்களைப் பெறும் வகையில் 5 இணைப்புகளுடன் செயல்பட்டு வந்த 1913 உதவி எண் தற்போது 15 இணைப்புகளுடன் செயல்படும். மேலும், பொதுமக்கள் 044-2561 9204, 044-2561 9206, 044-2561 9207 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு புகாா்களைத் தெரிவிக்கலாம்.

தாழ்வான பகுதிகளான 109 இடங்களில் மழை அதிகமாக பெய்யும் போது, நிவாரணப் படகுகள் மூலம் பொதுமக்களை மீட்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழைக் காலங்களில் பணிகளை மேற்கொள்ள வாா்டுக்கு 10 போ் என 2,000 பணியாளா்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

கடந்த ஆண்டு பருவமழை பணிகளுக்காக மண்டலத்துக்கு தலா ரூ. 5 லட்சம் ஒதுக்கப்பட்டது. நிகழாண்டு மண்டலத்துக்கு ரூ.10 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சியில் மழைக் காலங்களில் பணிகளை மேற்கொள்ள 23,000 பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இந்த ஆய்வின் போது, துணை மேயா் மு.மகேஷ்குமாா், ஆணையா் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் உயா் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.