மெட்ரோ ரயில் பணியின் காரணமாக புளியந்தோப்பு பகுதியில் சனிக்கிழமை (நவ.4) முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு சோதனை முயற்சியாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது.
அதன்படி, அயனாவரத்தில் இருந்து பெரம்பூர் பேரக்ஸ் சாலை - ஸ்ட்ரஹான்ஸ் சாலை சந்திப்பு நோக்கி வரும் வாகனங்கள் ஓட்டேரி சந்திப்பில் நிறுத்தப்படும். மாற்றாக, குக்ஸ் சாலை - ஸ்டீபன்சன் சாலை - அம்பேத்கர் கல்லூரி சாலை - பேரக்ஸ் கேட் சாலை - பெரம்பூர் பேரக்ஸ் சாலை (இடது) வழியாகச் செல்லலாம்.
ஸ்ட்ராஹான்ஸ் சாலையின் முழுப் பகுதியும் ஒரு வழியாகச் செயல்படும். பெரம்பூர் பேரக்ஸ் சாலை - ஸ்ட்ரஹான்ஸ் சாலை சந்திப்பில் இருந்து செல்ல அனுமதிக்கப்படும்.
இதையும் படிக்க: தென்காசி, நெல்லையில் நாளை(நவ.4) பள்ளிகளுக்கு விடுமுறை
ஓட்டேரி சந்திப்பில் இருந்து ஸ்ட்ரஹான்ஸ் சாலையை நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு அனுமதியில்லை என காவல் துறை குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.