நாகா இன மக்கள் துணிச்சல் மிக்கவர்கள், கண்ணியமானவர்கள் என தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்துள்ளார்.
நாகா இன மக்கள் குறித்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி அவதூறாகப் பேசியதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
நாகாக்கள் துணிச்சல், நேர்மை, கண்ணியம் மிக்கவர்கள். அவர்களை திமுகவின் ஆர்.எஸ்.பாரதி ‘நாய் கறி உண்பவர்கள்’ என பகிரங்கமாக இழிவுபடுத்துவது கேவலமானது, ஏற்க முடியாதது.
மொத்த இந்தியாவே பெருமைப்படும் சமூகத்தை காயப்படுத்தக் கூடாது என ஆர்.எஸ். பாரதியை வலியுறுத்துகிறேன் எனப் பதிவிடப்பட்டுள்ளது.
நாகாலாந்து ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பு வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.