47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் துப்பாக்கி!

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :7 நவம்பர் 2023, 9:12 am

DIN

சிதம்பரம்: பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியை திங்கள்கிழமை சுத்தம் செய்யும் பொழுது அறையில் ஒரு துப்பாக்கி  (AIR Gun) இருந்ததை கண்டெடுத்துள்ளனர். 

இது குறித்து சுற்றுலா அலுவலக மேலாளர் பைசல், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். ராஜாராமிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் உடனே விரைந்து சென்று துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.