பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் துப்பாக்கி!

பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சிதம்பரம்: பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கியால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சிதம்பரம் அருகே பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக விடுதியை திங்கள்கிழமை சுத்தம் செய்யும் பொழுது அறையில் ஒரு துப்பாக்கி  (AIR Gun) இருந்ததை கண்டெடுத்துள்ளனர். 

இது குறித்து சுற்றுலா அலுவலக மேலாளர் பைசல், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆர். ராஜாராமிற்கு தகவல் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் உடனே விரைந்து சென்று துப்பாக்கியை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com