திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சியில் ஒப்பந்த துப்புரவு தொழிலாளர்கள் மாதத்தின் முதல் வாரத்தில் ஊதியம், தீபாவளி பண்டிகை போனஸ் கேட்டு நகராட்சி அலுவலகத்தில் கொட்டும் மழையிலும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோரிக்கைகள்: ஒப்பந்த தூய்மை தொழிலாளர்களுக்கு பிரதி மாதம் 5 ஆம் தேதி ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும், தீபாவளி பண்டிகையையொட்டி முன்பணம் ரூ. 5,000 வழங்க வேண்டும், ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஈபிஎப், இஎஸ்ஐ மற்றும் விபத்து காப்பீட்டு சந்தா தொகை செலுத்தி அதன் பட்டியல் விவரங்களை ஒப்பந்ததாரர் தூய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின்படி நாள் ஊதியம் ரூ. 652 வழங்க வேண்டும், முந்தைய ஒப்பந்ததாரர்களால் வழங்கப்பட்டுள்ள ஏப்ரல் 2023 மற்றும் மே 2023 மாத கூலி நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் ,சீருடை கையுறை ,காலுறை, மழைக்கோட்டு , சோப்பு உரிய காலத்தில் வழங்க வேண்டும், மன்னார்குடி வஉசி சாலையில் அமைந்துள்ள தூய்மை பணியாளர்கள் குடியிருப்புகளை சீரமைத்து தர வேண்டும், ஒப்பந்த தூய்மை பணியாளருக்கு ஓய்வு அறை ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி தமிழ்நாடு ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சங்கத்தின் மன்னார்குடி நகராட்சி கௌரவத் தலைவர் கே. சிவசுப்பிரமணியம் தலைமையில் உள்ளிருப்புப் போராட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகளை விளக்கி ,சிஐடியு மாவட்ட தலைவர் எம்.கே.என். ஹனிபா, மாவட்ட துணைத் தலைவர் ஜி. ரெகுபதி, மாவட்ட பொருளாளர் ஏ.பி.டி. தனிக்கோடி ஆகியோர் பேசினர்.
இதில், நகராட்சி ஒப்பந்த தூய்மை பணியாளர் சங்கத்தின் தலைவர் எம்.வினோத், குமார் செயலாளர் ஆர். வினோத் ராஜ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் கொட்டும் மழையிலும் நகராட்சி அலுவலகம் வளாகத்தில் தரையில் அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை அடுத்து, மன்னார்குடி நகராட்சி ஆணையர் எல். நாராயணன், ஒப்பந்த தொழிலாளர்களின் பிரதிநிதிகளை தனது அறைக்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஜூன் 25: தொடர்ந்து 3-வது நாளாகக் குறைந்த தங்கம் விலை! இன்று எவ்வளவு?

பங்குச்சந்தைகள் உயர்வுடன் தொடக்கம்! ஆட்டோ, ரியல் எஸ்டேட் பங்குகள் லாபம்!

சட்டப்பேரவை மரபை மீறவில்லை! திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனா

ஐரோப்பாவில் கடும் வெய்யில்! பிரான்ஸில் 40 பேர் பலி!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



