டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை: ரூ.6,03,500 பறிமுதல்

காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை நள்ளிரவு வரை நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்து 500 பறிமுதல்

News image

லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை நள்ளிரவு வரை அதிரடி சோதனை நடத்திய காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம்

Updated On :10 நவம்பர் 2023, 9:08 am IST


சேலம்: காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை நள்ளிரவு வரை நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்து 500 கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஓமலூா் அருகே உள்ள காடையாம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளது. இங்கு வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேஷ், கிராம ஊராட்சிக்கான வட்டார வளா்ச்சி அலுவலா் உமாசங்கா் உள்பட அலுவலா்கள் பணியாற்றி வருகின்றனா்.

இங்கு அலுவலா் ஒருவா் தீபாவளிக்கு பணம் வசூலித்து வருவதாகவும், ஒப்பந்ததாா்களிடம் கமிஷன் தொகை கேட்டதாகவும் சேலம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு புகாா் வந்தது.

அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளா் ரவிச்சந்திரன் தலைமையில் சுமாா் 15 போ் அடங்கிய குழுவினா் வியாழக்கிழமை மதியம் 2 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை 10 மணி நேரத்திற்கும் மேலாக ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு உள்ளே இருந்த அதிகாரிகள், தலைவா், துணைத் தலைவா், அலுவலா்கள், ஒப்பந்ததாரா்கள் ஆகியோரிடம் அதிகாரிகளிடம் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். 

தொடா்ந்து வட்டார வளா்ச்சி அலுவலா்களின் காா்கள், தலைவரின் காா் ஆகியவற்றையும் ஆய்வு செய்தனா். வட்டார வளா்ச்சி அலுவலா் வெங்கடேஷ் அறையில் தனியாக ஒரு குழு ஆய்வு மற்றும் விசாரணை நடத்தியது.

அதைத் தொடந்து அலுவலக வளாகத்திலும், ஒவ்வொரு அலுவலரின் மேசை உட்பட அனைத்து இடங்களிலும் சோதனைகள் நடத்தப்பட்டது.

ஒப்பந்ததாரா்கள் கொண்டுவந்த பணம் குறித்தும், அந்தப் பணத்துக்கான ஆவணம் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் கணக்கில் வராத ரூ.6 லட்சத்து 3,500 கைப்பற்றப்பட்டதாகவும், பல்வேறு பணிகளுக்காக விடப்பட்ட ரூ.65 லட்சம் மதிப்புள்ள டெண்டரில் இந்த தொகை கை மாறியதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அதற்கான ஆவணங்களை கைப்பற்றி உள்ளதாகவும், இந்த முறைகேட்டில் ஈடுபட்ட அரசு அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள், தனி நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.