தொடர் மழை: முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 130 அடியை எட்டுகிறது!

தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் தண்ணீர் வரத்து உள்ளதால் நீர்மட்டம் 130 அடியை எட்டி வருகிறது. 
தொடர் மழை: முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 130 அடியை எட்டுகிறது!
Published on
Updated on
1 min read


கம்பம்: தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் தண்ணீர் வரத்து உள்ளதால் நீர்மட்டம் 130 அடியை எட்டி வருகிறது. 

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள முல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது, அதன்காரணமாக நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

வியாழக்கிழமை அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 2,230 கன அடியாக இருந்தது, வெள்ளிக்கிழமை வினாடிக்கு 1,853 கன அடியாக வந்துகொண்டிருக்கிறது. அதே நேரத்தில் தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு மிக குறைந்த அளவான 105 கன அடியாக இருந்தது.

நீர் வரத்து அதிகமாகவும், நீர் வெளியேற்றம் குறைவாகவும் இருப்பதால் அணையில் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.

வியாழக்கிழமை 128.40 அடியாக இருந்த நீர்மட்டம், வெள்ளிக்கிழமை 129.10 அடியாக உயர்ந்தது.

இதுகுறித்து அணையின் பொறியாளர் ஒருவர் கூறும்போது, அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையின் நீர்மட்டம் 130 அடியை எட்டி வருகிறது, வரும் நாள்களில் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது என தெரிவித்தார். 

அணை நிலவரம்
வெள்ளிக்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீர் மட்டம் 129.10 அடி (மொத்த உயரம் 152 அடி), நீர் இருப்பு 4,503.50 மில்லியன் கன அடி, நீர் வரத்து வினாடிக்கு 1,853 கன அடி, தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் வினாடிக்கு 105 கன அடியாக உள்ளது. நீர்பிடிப்புப் பகுதிகளான பெரியாறு அணையில் 2.0 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 3.8 மி.மீட்டர் மழையும் பெய்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com