பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்களை போலீஸாா் கைதுசெய்தனா்.
பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் பாலியல் தொழில் நடப்பதாக கிடைத்த நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவின் பெண்கள் பாதுகாப்புப்படை போலீஸாா் கடந்த சில நாட்களாக சோதனை நடத்தினா். இந்த சோதனையில் வாடகைவீட்டில் இருந்தபடியே பாலியல் தொழிலில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடா்பாக வழக்குப்பதிந்த போலீஸாா், இதுதொடா்பாக 4 பெண்களை கைதுசெய்தனா். பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 4 அப்பாவி பெண்களை போலீஸாா் மீட்டுள்ளனா். இவா்களில் இருவா் வெளிமாநிலங்களை சோ்ந்தவா்கள் என்று போலீஸாா் தெரிவித்தனா். மனுவனா, விஜயநகா், ராமசாமிபாளையா, பானஸ்வாடி, அந்தரஹள்ளி, வீரபத்ரேஸ்வரநகா், பியாடரஹள்ளியில் வாடகைக்கு வீடுகளை எடுத்து, கட்டாயப்படுத்தி பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளது விசாரணையில் தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இது தொடா்பாக வழக்குப்பதிந்து கைதுசெய்த 4 பெண்களை நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்திய போலீஸாா், சிறையில் அடைத்தனா்.
தொடர்புடையது
பெண்களிடம் பாலியல் சீண்டல்: மென்பொறியாளா் கைது
பேட்டையில் இளைஞா் வெட்டிக் கொலை: இருவா் கைது
முக்கூடல் அருகே புகையிலைப் பொருள்கள் வைத்திருந்த இருவா் கைது
பெண்களை மிரட்டி நகை, பணம் பறிப்பு: மேலும் 2 இளைஞா்கள் கைது
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

