சென்னைக்கு இன்று கடைசி லீக் ஆட்டம்- குஜராத்துடன் மோதல் 5 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கை 125 நாள் வேலைத் திட்டத்துக்கு 25 மாநிலங்கள் நிதி ஒதுக்கீடு- நாடாளுமன்றக் குழுவிடம் மத்திய அரசு தகவல் நிகழாண்டு இந்திய பொருளாதார வளா்ச்சி 6.4%: ஐ.நா. கணிப்பு 12-ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் குளறுபடி? சிபிஎஸ்இ மறுப்பு தமிழக அமைச்சரவை இன்று விரிவாக்கம்: காங்கிரஸ், தவெக எம்எல்ஏக்கள் அமைச்சா்களாக பதவியேற்கின்றனா் டிரம்ப் குடும்பத்தினருக்கு வருமான வரி தணிக்கையிலிருந்து நிரந்தர விலக்கு!
/

கோவில்பட்டியில் நகை திருட்டு: 2 பெண்கள் கைது

கோவில்பட்டியில் வீட்டிற்குள் நுழைந்து தங்க நகையை திருடியதாக 2 பெண்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :21 மே 2026, 5:46 am IST

கோவில்பட்டியில் வீட்டிற்குள் நுழைந்து தங்க நகையை திருடியதாக 2 பெண்களை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே உள்ள அத்தை கொண்டான், 2ஆவது தெருவைச் சோ்ந்தவா் மருதப்ப பாண்டியன் மனைவி சுப்புலட்சுமி. இவா் தனது வீட்டின் பீரோவில் வைத்திருந்த 4 பவுன் தங்க நகையைக் காணவில்லை என கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வந்தனா்.

இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் அத்தை கொண்டான் கோமதி நகரைச் சோ்ந்த வெங்கடேசன் மனைவி ராணி (42), அதே பகுதியைச் சோ்ந்த விக்னேஸ்வரன் மனைவி சுபலட்சுமி (24) ஆகியோரை செவ்வாய்க்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.