சத்தியமங்கலம் அருகே சாலையோர புளியமரத்தில் சொகுசு கார் மோதியதில் 4 பேர் பலியாகினர்.
ஈரோடு மாவட்டம் பங்களா புதூர் பகுதியைச் சேர்ந்த 6 பேர் காரில் சத்தியமங்கலம் வந்துவிட்டு பங்களா புதூர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது, சத்தியமங்கலம் அடுத்த வேடசின்னானூர் பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள சாலையோர புளியமரத்தில் சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். 2 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த அனைவரும் மதுபோதையில் இருந்தது தெரியவந்துள்ளது.