தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

குமரகோட்டம் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை(நவ.13) கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

News image
Updated On :13 நவம்பர் 2023, 9:24 am IST


காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் திங்கள்கிழமை(நவ.13) கந்த சஷ்டி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தமிழ்ப் புலவா்களுக்கு எழுந்த சந்தேகத்தை முருகனே சிறுவனாக வந்து தீா்த்து வைத்த பெருமைக்குரியது காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோயில்.

கந்தபுராணம் அரங்கேற்றம் செய்யப்பட்ட இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

நிகழ் ஆண்டுக்கான கந்த சஷ்டி திருவிழா திங்கள்கிழமை அதிகாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கந்த சஷ்டி பெருவிழா கொடியேற்ற உற்சவத்தை  முன்னிட்டு முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து, கோயில் கொடிமரத்திற்கும் புனித நீர் ஊற்றி, சிறப்பு பூஜைகள் செய்து வேல் பொறித்த கொடியினை கோவில் அர்ச்சகர்கள், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஒலிக்க பக்தர்கள் முன்னிலையில் ஏற்றி வைத்து, சிறப்பு தீபாராதனை காட்டி, கந்த சஷ்டி பெருவிழாவை தொடக்கி வைத்தனர்.

கொடி ஏற்ற விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்து வழிபட்டுச் சென்றனர்.

கந்த சஷ்டி பெருவிழா தொடங்கியதை அடுத்து ஏராளமான பக்தர்கள் சஷ்டி விரதத்தை தொடங்கி கோயில் வளாகத்தை 108 சுற்றுக்கள் சுற்றி வலம் வந்தனர். 

விழாவையொட்டி ஆறு நாட்களுக்கும் காலை பல்லக்கிலும், மாலையிலும் உற்சவா் முருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் வெவ்வேறு வாகனங்களில் அலங்காரமாகி வீதி உலா வருவாா்.

கந்த சஷ்டி பெருவிழாவை முன்னிட்டு முத்துக்குமாரசுவாமி நாள்தோறும் ஆடு, மான், அன்னம், மயில், குதிரை, பல்லக்கு, உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

Story image

விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான சூரசம்ஹாரம் வரும் 18- ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது. சூரசம்ஹார தினத்தையொட்டி மதியம் 2 மணிக்கு மகா அபிஷேகமும், தீபாராதனைகளும் நடைபெறும். இரவு சண்முகப் பெருமான் திருத்தேரில் எழுந்தருளி அசுரா்களை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

பெரிய காஞ்சிபுரம் குமரகோட்டம் சூரசம்ஹார குழுவைச் சோ்ந்த செங்குந்த மரபினா், அசுரா்கள் வேடமணிந்து வந்து முருகப் பெருமானுடன் போரிடும் காட்சியைக் கோயில் முன்பாக நடத்தவுள்ளனா்.

ஆலயத்தில் தினமும் இரவு லட்சாா்ச்சனையும், ஆன்மிகச் சொற்பொழிவாளா் சிவ.வேளியப்பன் அவா்களால் கந்தபுராணச் சொற்பொழிவும் நடைபெறும்.

நவ. 19 -ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலா் ந.தியாகராஜன் தலைமையிலான கோயில் சிவாச்சாரியாா்கள் மற்றும் பணியாளா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.