தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புசென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் 4,798 பேர் வேட்புமனு தாக்கல்!

தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 4,798 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

News image

கோப்புப்படம்

Updated On :13 நவம்பர் 2023, 1:01 am IST

தெலங்கானா சட்டப்பேரவைத் தோ்தல் நவம்பா் 30-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் முதல்வா் கே.சந்திரசேகர் ராவ் தலைமையிலான பாரத ராஷ்டிர சமிதி தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றும் நோக்கில் களமிறங்கியுள்ளது. பிஆர்எஸ், காங்கிரஸ், பாஜக இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 3-ஆம் தேதி துவங்கியது. வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நவம்.10 ம் தேதி முடிவடைந்தது. நவம்.13-ஆம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும். 15-ஆம் தேதி வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஆகும்.

மொத்தமுள்ள 119 தொகுதிகளிலும் ஆளும் பி.ஆர்.எஸ் கட்சி போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சி 118 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக 111 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

119 தொகுதிகளில் போட்டியிடும் 4,798 வேட்பாளர்கள் 5,716 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதிகபட்சமாக கஜ்வெல் தொகுதியில் 145 வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இத்தொகுதியில் முதல்வர் சந்திரசேகர ராவ் மீண்டும் போட்டியிடுகிறார். 

மேட்ச்சல் தொகுதியில் 116 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக நாராயணப்பேட்டை தொகுதியில் 19 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

அக்டோபர் 9-ஆம் தேதி தேர்தல் அறிவிப்பு வெளியானது முதல் தேர்தல் நன்னடத்தை விதிகளும் அமலுக்கு வந்தன. அதைத் தொடர்ந்து  நவம்.11-ஆம் தேதி வரை ரூ.544 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

119 தொகுதிகள் அடங்கிய தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ஆம் தேதி எண்ணப்பட்டு, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.