மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

கம்பம் அருகே இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்

தேனி மாவட்டம் கம்பம் அருகே சுருளிப்பட்டியில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. 

News image

சுருளிப்பட்டியில் நடைபெற்ற இரட்டை மாட்டுவண்டி பந்தயம்

Updated On :15 நவம்பர் 2023, 11:19 am IST

கம்பம்: சுருளிப்பட்டியில் இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது.

தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளிப்பட்டியில் இன்று இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.

கூடலூர் மேற்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஒக்கலிகர் காப்பு ஏர் உழவர் சங்கம் சார்பில், இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் சுருளிப்பட்டி - சுருளி அருவி சாலையில் இன்று நடைபெற்றது. இந்த பந்தயத்திற்கு பி.கே.ராம்பா தலைமை வகித்தார்.

இந்த பந்தயத்தில் பெரிய மாடு, நடு ஜோடி, கரிச்சான், தேன் சிட்டு, பூஞ்சிட்டு, தட்டான்சிட்டு என 6 வகையான மாட்டு வண்டிகள் பங்கேற்றன. இதில் வெற்றிபெற்ற மாட்டு வண்டிகள், ஓட்டிய சாரதிகளுக்கு விழாக் குழுவினர் பரிசுகளை வழங்கினர். 150-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் இந்தப் பந்தயத்தில் பங்கேற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.