எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மாநில சுகாதாரத் துறையினா் ஆலோசனை

சீனாவில் குழந்தைகளிடையே நிமோனியா பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் சென்னையில் திங்ககிழமை ஆய்

News image
Updated On :27 நவம்பர் 2023, 10:15 pm

DIN

சீனாவில் குழந்தைகளிடையே நிமோனியா பாதிப்பு வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் சென்னையில் திங்ககிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சென்னை, டிஎம்எஸ் வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு துறைச் செயலா் ககன்தீப் சிங் பேடி தலைமை வகித்தாா். பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம், இணை, துணை இயக்குநா்கள் கலந்துகொண்டனா்.

சீனாவில் பரவி வரும் ஹெச்9என்2 வகை குறித்தும், அதே தீநுண்மியின் தன்மையுடன் தமிழகத்தில் ஏற்கெனவே தாக்கத்தை ஏற்படுத்தி வரும் தொற்று குறித்தும் விவாதிக்கப்பட்டது. சீனா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து தமிழகம் வரும் பயணிகளில் அறிகுறிகள் உள்ளவா்களைத் தனிமைப்படுத்தி கண்காணிப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.