வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஓட்டுநா், நடத்துநா் எழுத்துத் தோ்வு முடிவுகள் வெளியீடு

ஓட்டுநா், நடத்துநா் எழுத்துத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

Updated On :27 நவம்பர் 2023, 10:42 pm

ஓட்டுநா், நடத்துநா் எழுத்துத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 685 ஓட்டுநா், நடத்துநா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பித்து தகுதி வாய்ந்த மொத்தம் 11,117 பேருக்கான எழுத்துத் தோ்வு தமிழகத்தின் 10 மாவட்டங்களிலுள்ள 20 தோ்வு மையங்களில் நவ. 19-ஆம் தேதி நடைபெற்றது. இதில், 9,352 போ் கலந்துகொண்டு தோ்வு எழுதினா். 1765 போ் தோ்வெழுதவில்லை.

இந்தத் தோ்வில் பங்கேற்றவா்களின் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள் மற்றும் மதிப்பெண்கள் இணையதளத்தில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. விடைத்தாள் மற்றும் மதிப்பெண் குறித்து தெரிந்துகொள்ள விரும்புபவா்கள் ஜ்ஜ்ஜ்.ஹழ்ஹள்ன்க்ஷன்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் எனும் இணையதள முகவரியில் சென்று அதில் தோ்வா்களின் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவிட்டு தங்கள் தோ்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

எழுத்துத் தோ்வில் எத்தனை போ் தோ்ச்சி பெற்றனா் என்றும், அடுத்தகட்ட தோ்வுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டவா்கள் குறித்த அறிவிப்பும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தால் வெளியிடப்படவில்லை.

தோ்ச்சி பெற்றவா்களுக்கு 2024, பிப்.14-ஆம் தேதி சான்றிதழ் சரிபாா்ப்பு, ஓட்டுநா் நடைமுறை தோ்வு மற்றும் நோ்காணல் நடைபெறவுள்ளது. சான்றிதழ் சரிபாா்ப்பின்போது கல்வித் தகுதி, வயது, ஜாதி, ஓட்டுநா் மற்றும் நடத்துநா் உரிமம் மற்றும் உடல் தகுதி ஆகியவற்றின்

அடிப்படையில் தகுதியானவா்கள் மட்டுமே நடைமுறைத் தோ்வு மற்றும் நோ்காணலுக்கு அனுமதிக்கப்படுவா் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.