காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சிதம்பரம் நடராஜர் கோயிலில் பிரமாண்டமான கொலு!

சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு 30 அடி உயரத்தில் பிரமாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது. நவராத்திரி தினத்தின் தொடக்க தினமான ஞாயிற்றுக்கிழமை(இன்று) தொடங்கப்பட்டது.

News image

சிதம்பரம் நடராஜர் கோயிலில் வைக்கப்பட்டுள்ள மெகா கொலு.

Updated On :15 அக்டோபர் 2023, 9:05 am

DIN

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு 30 அடி உயரத்தில் பிரமாண்டமான கொலு வைக்கப்பட்டுள்ளது. நவராத்திரி தினத்தின் தொடக்க தினமான ஞாயிற்றுக்கிழமை(இன்று) தொடங்கப்பட்டது.

ஸ்ரீ நடராஜர் கோயிலில் கல்யாண மண்டபத்தில் நவராத்திரி கொலு உற்சவத்தை முன்னிட்டு 30 அடி உயரத்தில், 30 அடி அகலத்தில் 21 படிகளுடன் பிரமாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது. 

இன்று (அக்.15) தொடங்கிய இந்த கொலு வருகிற அக்.24-ம் தேதி வரை நடைபெறுகிறது. 9 தினங்களும் இரவு 9 மணிக்கு கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு முன்பு உள்ள வெள்ளி ஊஞ்சலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி அம்பாளுக்கு, ஊஞ்சல் உற்சவமும், தீபாராதனையும் நடைபெறும்.

Story image

கொலுவில் ஸ்ரீ நடராஜர் முதல் சிறிய பொம்மைகள் வரை சுமார்  3500 ஆயிரம் பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரமாண்டமான கொலுவினை திரளான மக்கள் வந்து பார்த்து வணங்கி செல்கின்றனர். 

நவராத்திரி கொலு குறித்து கோயில் பொதுதீட்சிதர்களில் ஒருவரான உ.வெங்கடேச தீட்சிதர், ஒரறிவு முதல் ஆறறிவு மனிதன் வரை பரினாம வளர்ச்சிகளை வணங்கும் வன்னம் இந்த கொலு வைத்து வணங்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.