நீடாமங்கலம் அஞ்சலக அலுவலரைக் காணவில்லை!

நீடாமங்கலம் தபால் நிலைய அதிகாரியை காணவில்லை என அவர்களது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். 
நீடாமங்கலம் அஞ்சலக அலுவலரைக் காணவில்லை!

நீடாமங்கலம் தபால் நிலைய அதிகாரியை காணவில்லை என அவர்களது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். 

நீடாமங்கலம் புதுத்தெருவில் வசித்து வருபவர் துரைசாமி மகன் செந்தில்வேலன் (50) இவர் நீடாமங்கலம் தபால்நிலைய அதிகாரியாக வேலைபார்த்து வருகிறார். இவரது மனைவி அமராவதி (49) வலங்கைமான் வட்டாரக்கல்வி அலுவலகத்தில் வேலைபார்த்து வருகிறார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.அவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதுகலை படித்து வருகிறார்.

கடந்த 17ம் தேதி முதல் செந்தில்வேலனை காணவில்லை. அவரை குடும்பத்தினர் பல இடங்களிலும் தேடினர். தபால்துறை உயரதிகாரிகளும், நீடாமங்கலம் தபால்நிலைய சக ஊழியர்களும் செந்தில்வேலனை காணாததால் அதிர்ச்சியடைந்தனர். தபால்நிலைய உயரதிகாரிகள் நீடாமங்கலம் வந்து கணக்கு வழக்குகளையும், இதர கோப்புகளையும் சரிபார்த்தனர்.

கணக்கு வழக்குகள், கோப்புகளை செந்தில்வேலன் முறையாக பராமரித்துள்ளதாக கூறப்படுகிறது. செந்தில்வேலன் எல்லோரிடமும் நல்ல முறையில் பழகக்கூடியவர் அவர் காணாதது சக நண்பர்கள், அலுவலர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

பல இடங்களிலும் தேடியும் கிடைக்காததால்  செந்தில்வேலன் மனைவி அமராவதி நீடாமங்கலம் காவல் நிலையத்தில் தனது கணவரை கண்டுபிடித்து தருமாறு கடந்த 21ம் தேதி புகார் செய்தார். 

புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து செந்தில்வேலனை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com