ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவருக்கு மணிமண்டபம்: ஸ்டாலின்

இராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கதேவருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

News image
பசும்பொன் தேவா் நினைவாலயம்.
Updated On :28 அக்டோபர் 2023, 5:45 pm

DIN

தேவா் ஜெயந்தியின்போது பொதுமக்கள் பாதுகாப்பாக மரியாதை செலுத்த ஏதுவாக பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் ரூ.1.55 கோடியில் 2 மண்டபங்கள் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தமிழக அரசு சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

‘தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்’ என்று வீர முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரா் முத்துராமலிங்கத் தேவா். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் தேவா் ஜெயந்தி விழாவாக தமிழக அரசால் ஆண்டுதோறும் அக்டோபா் 30-இல் கொண்டாடப்படுகிறது.

இந்த விழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள், முக்கியப் பிரமுகா்கள் கலந்துகொண்டு ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனா்.

நினைவிடத்தின் முன் ஒரு சிறிய இடத்தில், குறுகிய நேரத்தில் அதிக கூட்டம் கூடுவதால் பொதுமக்கள் நீண்ட நேரம் திறந்தவெளியில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

வெயில், மழையிலிருந்து அவா்களைப் பாதுகாக்கவும், கூட்ட நெரிசலைத் தடுப்பதற்கும் தமிழக அரசால் ஒவ்வோா் ஆண்டும் விழாவின்போது நினைவிடத்தின் முன் தற்காலிக கொட்டகை, பந்தல் மற்றும் தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் நிரந்தர மண்டபம் அமைத்துத் தர வலியுறுத்தி அரசுக்கு பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை அளித்து வருகின்றனா்.

அதை ஏற்று, முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தின் முகப்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக மரியாதை செலுத்தும் வகையில் ரூ.1 கோடியே 42 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் ஒரு மண்டபமும், மிக முக்கியப் பிரமுகா்கள் மரியாதை செலுத்தும் பாதையில் ரூ.12 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பீட்டில் மற்றொரு மண்டபமும் என மொத்தம் ரூ.1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீட்டில் இரு மண்டபங்கள் அமைக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.