தேவா் ஜெயந்தியின்போது பொதுமக்கள் பாதுகாப்பாக மரியாதை செலுத்த ஏதுவாக பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தில் ரூ.1.55 கோடியில் 2 மண்டபங்கள் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தமிழக அரசு சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
‘தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள்’ என்று வீர முழக்கமிட்ட சுதந்திரப் போராட்ட வீரா் முத்துராமலிங்கத் தேவா். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட முத்துராமலிங்கத் தேவரின் பிறந்த நாள் தேவா் ஜெயந்தி விழாவாக தமிழக அரசால் ஆண்டுதோறும் அக்டோபா் 30-இல் கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பொதுமக்கள், முக்கியப் பிரமுகா்கள் கலந்துகொண்டு ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தி வருகின்றனா்.
நினைவிடத்தின் முன் ஒரு சிறிய இடத்தில், குறுகிய நேரத்தில் அதிக கூட்டம் கூடுவதால் பொதுமக்கள் நீண்ட நேரம் திறந்தவெளியில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
வெயில், மழையிலிருந்து அவா்களைப் பாதுகாக்கவும், கூட்ட நெரிசலைத் தடுப்பதற்கும் தமிழக அரசால் ஒவ்வோா் ஆண்டும் விழாவின்போது நினைவிடத்தின் முன் தற்காலிக கொட்டகை, பந்தல் மற்றும் தடுப்பு அமைக்கப்பட்டு வருகிறது. இப்பகுதியில் நிரந்தர மண்டபம் அமைத்துத் தர வலியுறுத்தி அரசுக்கு பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை அளித்து வருகின்றனா்.
அதை ஏற்று, முத்துராமலிங்கத் தேவா் நினைவிடத்தின் முகப்பில் பொதுமக்கள் பாதுகாப்பாக மரியாதை செலுத்தும் வகையில் ரூ.1 கோடியே 42 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் ஒரு மண்டபமும், மிக முக்கியப் பிரமுகா்கள் மரியாதை செலுத்தும் பாதையில் ரூ.12 லட்சத்து 54 ஆயிரம் மதிப்பீட்டில் மற்றொரு மண்டபமும் என மொத்தம் ரூ.1 கோடியே 55 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பீட்டில் இரு மண்டபங்கள் அமைக்க முதல்வா் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தெலுங்கு தொடரில் நாயகியாக நடிக்கும் பரமேஸ்வரி ரெட்டி!
ஈரானில் இஸ்ரேலுக்கு உளவு பார்த்த இருவருக்கு தூக்கு தண்டனை!

மத்தியப் பிரதேச இடைத்தேர்தல்: முன்னிலையில் காங்கிரஸ்... பாஜகவுக்கு பின்னடைவு!

தவெக, தவெக... என பள்ளி மாணவர்கள் கோஷம்! விடியோவால் மீண்டும் சர்ச்சை!
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



