ஆசிரியர் தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஆசிரியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)
மு.க. ஸ்டாலின் (கோப்புப்படம்)

ஆசிரியர் தினத்தையொட்டி முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வாழ்த்துக்களை சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்ததாவது:

தாய் தந்தைக்கு அடுத்து மூன்றாவது இடத்தில் வைத்து வணங்கத்தக்கவர்கள் ஆசிரியப் பெருமக்கள். மாணவச் செல்வங்களை அறிவாற்றல் கொண்டவர்களாய் வளர்த்தெடுத்து வாழ்க்கைப் பயணத்துக்கு வாழ்நாளெல்லாம் வழிகாட்டும் கலங்கரை விளக்கே கல்வித்துறை ஆசிரியர்கள். 

கல்வியுடன் இணைந்து உயரிய பண்பாட்டையும் அறநெறிகளையும் ஒழுக்கத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் மாணவ சமுதாயத்துக்குக் கற்றுத்தரும் அறிவுப் பெற்றோராக ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

தன்னை உருக்கி அறிவூட்டும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com