ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது!
வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.


வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்ற ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருச்சூர் அடிப்படையிலான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் சையது நபில் தமிழ்நாடு, கர்நாடகம் பகுதிகளில் மாறி மாறி தலைமறைவாக இருந்துவந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி ஆவணங்கள் மூலமாக நேபாள நாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்றபோது என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். கைதான ஐஎஸ் அமைப்பின் தலைவரிடமிருந்து முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஏற்கெனவே ஈரோடு வனப்பகுதியில் தலைமறைவாக இருந்த ஆசிஃப் என்வரையும் என்ஜஏ அதிகாரிகள் கைது செய்தது. இந்நிலையில், இன்று ஐஎஸ் அமைப்பின் தலைவர் கைதாகியுள்ளார்.
ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டுவது, பயங்கரவாத தாக்குதலைத் திட்டமிட்டது போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...