ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

மரக்காணத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணியை உடனே தொடங்க வேண்டும்: சி.வி. சண்முகம்

மரக்காணம் அடுத்த அழகன் குப்பத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும், தவறும்பட்சத்தில் அதிமுக சார்பில் வழக்குத் தொடரப்படும்

News image
Updated On :13 செப்டம்பர் 2023, 8:01 am

DIN

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த அழகன் குப்பத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணியை உடனடியாகத் தொடங்க வேண்டும், தவறும்பட்சத்தில் அதிமுக சார்பில் வழக்குத் தொடரப்படும் என்றார் அதிமுக முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி. சண்முகம்.

மரக்காணம் அருகே அழகன்குப்பம் கிராமத்தில் ரூ.235 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என அதிமுக ஆட்சிக்காலக்தில் அறிவிக்கப் பட்டது. தற்போது இந்தத் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

Story image

மரக்காணத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர். 

இந்தநிலையில், திமுக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்தும். அழகன் கும்பத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணிகளை உடனடியாக நிறைவேறை வலியுறுத்தியும் விழுப்புரம் மாவட்ட அதிமுக சார்பில் மரக்காணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.வி. சண்முகம் பேசியது: அதிமுக அரசால் தொடங்கப்பட்ட அனைத்துத் திட்டங்களையும் திமுக ரத்து செய்து வருவது கண்டனத்துக்குரியது. 

மரக்காணம் அழகன்குப்பத்தில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணிகளை தமிழக அரசு உடனே தொடங்க வேண்டும், தவறும் பட்சத்தில் அதிமுக சார்பில் வழக்குத் தொடரப்படும். பாதிப்புக்குள்ளாகும் மீனவர்களின் நலனின் தமிழக அரசு பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்றார் சி.வி. சண்முகம். 

இந்த ஆர்ப்பாட் டத்தில் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.