கோவை முழுவதும் 20 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

கோவை முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சனிக்கிழமை அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read


கோவை: கோவை முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் சனிக்கிழமை அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த அக்டோபர் 23 ஆம் தேதி கோவை, உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரா் கோயில் அருகே  நிகழ்ந்த காா் வெடிப்பு சம்பவத்தில் காரில் இருந்த ஜமேஷா முபீன் (29) அதே இடத்தில் உயிரிழந்தார். 

இதையடுத்து முபீன் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையின்போது, ஏராளமான வெடிபொருள்கள், ஐஎஸ் அமைப்புடன் தொடா்புடையதாக பல்வேறு ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. 

மேலும் இந்த வழக்கில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில் கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள் சனிக்கிழமை அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை உக்கடம், போத்தனூர், கரும்புக்கடை, ஜிஎம் நகர் உள்ளிட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com