சென்னை: சென்னை தி.நகர் அருகே சாலையில் இன்று அதிகாலை திடீர் பள்ளம் ஏற்பட்டதால் பொதுமக்களிடையே பரபரப்பு நிலவுகிறது.
தி.நகர், பாண்டி பஜார் அருகேவுள்ள நாயர் சாலையில் வியாழக்கிழமை அதிகாலை 3 மணியளவில் சுமார் 3 அடி அகலமும், 10 அடி ஆழமுடைய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளத்தை சுற்றியும் தடுப்புகள் அமைத்து வாகனங்களை மாற்றுப் பாதையில் போக்குவரத்து காவல்துறையினர் அனுப்பி வருகின்றனர்.
முதல்கட்ட தகவலில், அப்பகுதியில் நடைபெறும் கழிவு நீர் கால்வாய் பணியால் பள்ளம் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.