தமிழகத்தில் 14 இடங்களில் சதமடித்த வெயில்!

தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்


தமிழ்நாட்டில் 14 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் பதிவாகியதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், மதுரை, கரூர் பரமத்தி, சேலம், திருச்சி, நாமக்கல், திருத்தணி, மதுரை விமான நிலையம் உள்ளிட்ட இடங்களில் வெயில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

திங்கள் முதல் புதன்கிழமை வரை 3 நாள்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை மையம் ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com