ஜூன் 5-ம் தேதி தமிழகம் வருகிறார் குடியரசுத் தலைவர் முர்மு!

முதல்வர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 5-ஆம் தேதி தமிழகம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

முதல்வர் மு.க.ஸ்டாலினின் அழைப்பை ஏற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜூன் 5-ஆம் தேதி தமிழகம் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தில்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று சந்தித்துப் பேசினார் இந்த சந்திப்பின் போது கிண்டியில் அமையவுள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழவிற்கு அழைப்பு விடுத்தார். 

இந்நிலையில் முதல்வரின் அழைப்பை ஏற்றுக்கொண்டு ஜூன்5-ம் தேதி குடியரசுத் தலைவர் முர்மு தமிழகம் வருகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 5-ம் தேதி சென்னை, கிண்டியில் உள்ள பன்னோக்கு அரசு மருத்துவமனையைத் திறந்து வைக்கிறார். 

சென்னைக்கு வரவுள்ள குடியரசுத் தலைவர் திரௌபதிக்கு சிறப்பு வரவேற்பு அளிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com