4 மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளை சீரமைக்க ரூ. 1 கோடி நிதி

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளை சீரமைக்க ரூ. 1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது. 
4 மாவட்டங்களில் அரசுப் பள்ளிகளை சீரமைக்க ரூ. 1 கோடி நிதி
Published on
Updated on
1 min read

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளை சீரமைக்க ரூ. 1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தகவல் தெரிவித்துள்ளது. 

மிக்ஜம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை, கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

மிக்ஜம் புயலால் இந்த 4 மாவட்டங்களில் அரசுப்பள்ளிகள் சேதமடைந்துள்ளன. இதையடுத்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பள்ளிகளை சீரமைக்கவும் தூய்மைப்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்டத்திற்கு தலா ரூ. 25 லட்சம் வீதம் ரூ. 1 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளதாக பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. 

வருகிற திங்கள்கிழமை(டிச. 11) முதல் பள்ளிகள் செயல்பட உள்ள நிலையில் பள்ளிகளைத் தூய்மைப்படுத்தும் பணிகள், சேதமடைந்தவற்றை சரிசெய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com