மதுரை: ரயில்வே இருப்புப் பாதை சீரமைப்புப் பணி காரணமாக, திருநெல்வேலி- திருச்செந்தூா் இடையேயான அனைத்து முன்பதிவில்லாத ரயில்களும் வெள்ளி, சனி (டிச. 22, 23) ஆகிய 2 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டன.
இதுகுறித்து மதுரைக் கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு :
இதையும் படிக்க | மேட்டூர் அணை நீர்வரத்து 1,584 கன அடியாக அதிகரிப்பு
பலத்த மழை, வெள்ளம் காரணமாக சேதமடைந்த செய்துங்கநல்லூா் - ஸ்ரீ வைகுண்டம் இடையேயான ரயில்வே இருப்புப் பாதையைச் சீரமைக்கும் பணி நடைபெறுகிறது. இதனால், திருநெல்வேலி - திருச்செந்தூா் தடத்தில் அனைத்து முன்பதிவில்லாத ரயில்களும், தூத்துக்குடி - திருநெல்வேலி முன்பதிவில்லாத ரயிலும் (06667) வெள்ளி, சனி ஆகிய 2 நாள்களும் ரத்து செய்யப்படுகின்றன.
இதேபோல, வாஞ்சிமணியாச்சி - திருச்செந்தூா் தடத்தில் ரயில் சேவை, திருநெல்வேலி வரை மட்டுமே இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.